தொட்டாற்சிணுங்கி செடியின் மருத்துவகுணங்கள்:-
பல நோய்களுக்கு மருந்தாகும் இதனை மூலிகை என்பதே பொருத்தமாகும். இதன் தாவரப் பெயர் MIMOSA PUDICA. இது FABACEAE என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள் நமஸ்காரி, காமவர்த்தினி.
இதன ஆங்கிலப் பெயரே Touch me not என்பது. பொதுவாக எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடிய இது 5 அடி வரைப் படரும் தன்மையது. சுமார் 60 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும். ஆற்றோரங்களில் காணப்படும் இது மனிதர்கள் தொட்டாலோ, சிறு அதிர்வு ஏற்பட்டாலோ தன் இலைகளைச் உள்பக்கமாகச் சுருட்டிக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.
இதன ஆங்கிலப் பெயரே Touch me not என்பது. பொதுவாக எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடிய இது 5 அடி வரைப் படரும் தன்மையது. சுமார் 60 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும். ஆற்றோரங்களில் காணப்படும் இது மனிதர்கள் தொட்டாலோ, சிறு அதிர்வு ஏற்பட்டாலோ தன் இலைகளைச் உள்பக்கமாகச் சுருட்டிக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.
இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்து இருக்கும். மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இதன் பூக்கள் இருக்கும். இவை இலைகளின் ஊடாக மலர்ந்து காணப்படும். இதன் காய் சுமார் 25 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்.
மலர்கள் சூரியனைக் காதலிப்ப்து நாம் அறிந்தது. ஆனால் இந்த சிடுமூஞ்சிக்கும் சூரியனுக்கும் காதல் என்றால் ...ஆம இதன் இலைகள் மாலையில் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளுமாம். காலையில் ஆதவனைக் கண்டதும் அழகிய தன் இலைகளை விரித்துக் கொள்ளுமாம்.
சரி இந்தத் தொட்டாச்சிணுங்கியின் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம். தொட்டாற் சுருங்கி வேரை பஞ்சு போலத் தட்டி அதனை ஒரு மண்சட்டியில் போட்டு அத்துடன் நீரைச் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரைக் கொதிக்க வைத்து அந்த நீரை நாளொன்றுக்கு மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம்
குடித்து வந்தால் நீர்க்கடுப்பு போயே போய்விடும். இதன் இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தாலும் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை காணாமல் போய்விடும்.
குடித்து வந்தால் நீர்க்கடுப்பு போயே போய்விடும். இதன் இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தாலும் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை காணாமல் போய்விடும்.
இதன் வேரையும் இலையையும் சம அளவு எடுத்து காயவைத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக வைத்துக்கொண்டு நாள்தோறும் 10 முதல் 15 கிராம் பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு தொடர்பான நோய்கள் போய்விடும். இலைச்சாறை மூலப்புண்ணிலும் அதாவது ரணங்களில் தடவி வந்தால் புண் ஆறி விடும். ஆறாத ரணங்களும் ஆறி விடும்.
இதன் இலையை விழுதாக அரைத்து பற்றுப் போட்டு வர வாதம் தொடர்பான கைகால் மூட்டுகளின் வலி, வீக்கம் குணமாகும். இதன் இலைகளை வெந்நீருடன் போட்டு கொதிக்க வைத்து ஊற்றி குளித்து வந்தால் இடுப்பு, முதுகு வலியும் குணமாகும். இவற்றைக் குறிக்கும் பாடல் இதோ....
இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்களே...இதில் காந்த சக்தி இருக்கிறதாம். தொடுகின்ற போது இந்தக் காந்த சக்தி மனிதனின் உடலில் ஈர்க்கப்படும். தொடர்ந்து இதனைத் தொட்டு வந்தால் மனோ வசியம் ஏற்பட்டு
மனம் நினைத்ததைச் செய்து முடிக்க முடியுமாம். பிடித்தவர்களை வசியம் செய்யவும் முடியுமாம். இதன் இலையை நாள்தோறும் தொட்டு வர பாலுணர்வு உணர்ச்சியை மிகுவிக்கும். இதனாலேயே இது காமவர்த்தினி என்று அழைக்கப் படுகிறது.
மனம் நினைத்ததைச் செய்து முடிக்க முடியுமாம். பிடித்தவர்களை வசியம் செய்யவும் முடியுமாம். இதன் இலையை நாள்தோறும் தொட்டு வர பாலுணர்வு உணர்ச்சியை மிகுவிக்கும். இதனாலேயே இது காமவர்த்தினி என்று அழைக்கப் படுகிறது.
No comments:
Post a Comment