Natural refrigerator - இயற்கை குளிர்சாதனப்பெட்டி
Natural refrigerator - இயற்கை குளிர்சாதனப்பெட்டி
பழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில்வைத்து உபயோகப்படுத்துவது நல்லது அல்ல. பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளியமுறையில் வாடாமல் வைக்கலாம். ஒருஅகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.(அளவு தேவைக்கேற்ப) அதை மணலில்நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிது நீர்தெளித்து மண்ணை ஈரமாக்கவும். ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல்விரிக்கவும். இதற்கு மேல் காய்கறிகளையும்பழங்களையும் வைக்கவும். இது ஓரளவுக்கு பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும். தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும். கீரைகள், க ருவேப்பிலை, கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் 1 நாளைக்கு வாடாமல்இருக்கும். தேவையிருக்கும் பொழுதுவாங்கி உடனே உபயோகிப்பது நல்லது. வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டுவளர்க்கலாம். அலங்கார செடிகள்வளர்ப்பதற்கு
பதிலாக கீரைகள், காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம். மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம்.
No comments:
Post a Comment