Wednesday, February 18, 2015

ஆனந்த சுவை பாஸந்தி

தேவையான பொருட்கள்

புல் கிரீம் பால் - 2 லிட்டர்
குங்குமப்பூ - சிறிதளவு
சர்க்கரை - 1/2 கப்

அலங்கரிக்க
நெய் - 1 டீஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
* அடிகனமான வாணலியில் பாலை ஊற்றி மெல்லிய தீயில் அடுப்பை வைத்து பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலந்து அதன் மேலே படியும் ஏடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.
* நடுநடுவே கலந்து, கலந்து பாலின் மேல் படியும் ஏடை, பாலின் அளவு 1/4 லிட்டர் அளவுக்கு குன்றும் வரை எடுத்து பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.
* பிறகு பாத்திரத்தில் சேகரித்த ஏடு, சர்க்கரை சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறவும்.
* நெய்யில் தோலுரித்த பாதாம், முந்திரி, பிஸ்தா வறுத்து பாஸந்தியின் மேல்போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு
* குளிர்காலத்தில் பாஸந்தியை சூடாகவும், வெயில் காலத்தில் பாஸந்தியை குளிர் சாதனப் பெட்டியில் வைத்தெடுத்து சில்லென்றும் பரிமாறலாம்.

No comments:

Post a Comment