Sunday, February 22, 2015

கோதுமை மாவு புட்டு

தேவையான பொருட்கள் ;
தரமான கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - முக்கால் கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - பாதி தேங்காயில்

மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.தண்ணீர்,உப்பு போட்டு கையால் உதிரியாக கிளறவும்.கால் மணி நேரம் வைக்கவும்.மிக்ஸி பெரிய ஜாரில் இரண்டு முறையாக பல்ஸில் 4 சுற்று போட்டு உதிரியாக எடுக்கவும்.அதனுடன் தேங்காய்ப்பூ சேர்த்து மிக்ஸ் செய்யவும்.புட்டுகுழலில் சிறிது நெய் தடவி மாவை முக்கால் அளவு போட்டு மூடவும்.அதனை அவித்து மணம் வரவும்,(சுமார் 5 -10 நிமிடம்) கழித்து எடுக்கவும்.

சுவையான கோதுமை மாவு புட்டு ரெடி.இதனை பச்சைபயறு கறியுடன் அல்லது கடலை கறியுடன் பரிமாறலாம்,வாழைப்பழம் பால்,சீனி போட்டும் சாப்பிடலாம்.ஆரோக்கியமான உணவாகும்.பக்குவமாக மாவை விரவி அவித்து எடுப்பதில் தான் அதன் சுவையே இருக்கிறது.

No comments:

Post a Comment